என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆட்டோ உடைப்பு"
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே நரம்பை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவியரசு (வயது34), ஆட்டோ டிரைவர். இவர் கிருமாம்பாக்கத்தில் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரிடம் கிருமாம்பாக்கம் மெயின்ரோட்டை சேர்ந்த பிரகாஷ்(31) என்பவர் மதுகுடிக்க அடிக்கடி பணம் கேட்டு பெறுவது வழக்கம்.
சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த பிரகாஷ் மீண்டும் மதுகுடிக்க கவியரசுவிடம் பணம் கேட்டார். அதற்கு கவியரசு சவாரிக்கு சென்று விட்டு பணம் தருவதாக தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த பிரகாஷ் தனக்கு உடனடியாக பணம்தர வேண்டும் என்று தகராறு செய்தார்.
மேலும் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் இரும்பு பைப்பை எடுத்து வந்து ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். அதோடு கவியரசுவை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து கவியரசு கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பிரகாசை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்